Saturday, February 9, 2008

சிறந்த தலைவராக இருப்பதற்கு 7 தகுதிகள் - துன் டாக்டர் மகாதீர் கருத்து.



தலைவர்களாக வரக்கூடியவர்கள் நற்பண்புகளுடன் இருக்க வேண்டும். அவர்கள் சாதனை படைக்காமல் இருந்தாலும் நல்ல குணமுள்ளவர்களாக இருந்தால் போதும் என மலேசிய முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட் அவர்கள் கருத்துரைத்துள்ளார்.


அவர் மேலும், நன்னெறியில்லாமல், ஆக்ரோஷமான முறையில் தலைவர்களாக வர வேண்டும் என்று எண்ணம் கொண்டவர்கள் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றார்.


மலேசியாவில் தலைவருக்கான நன்னெறியுள்ள ஆயிரம் தலைவர்கள் இருக்கலாம். ஆனால், அவர்கள் வெற்றி பெறாததற்கு காலம் அவர்களுக்கு சாதகமாக இல்லாமல் இருந்திருக்கலாம். அதே நேரத்தில் ஒருவர் நற்பண்புகள் இல்லாமல் இருந்தாலும் அவர்களுக்கு தலைமைத்துவம் வழங்கப்பட்டுள்ளது என்று அவர் சமீபத்தில் 'பெர்னாமா'வுக்கான செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.


ஒருவர் சிறந்த தலைவராக இருப்பதற்கு 7 தகுதிகளை துன் மகாதீர் பட்டியலிட்டார்.


1. ஒரு சிறந்தத் தலைவர் தன்னடக்கமாக இல்லாவிட்டாலும் பெரிதாக பேசக்கூடாது.


2. ஒருவர் தன் பொறுப்புகளை ஏற்று மேற்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். ஆனால், தலைமைத்துவத்தில் நெருக்குதல், கடுமை இருக்கக்கூடாது.


3. ஒருவர் தனது தோல்விக்கு அடுத்தவரை குறை சொல்லக்கூடாது. தனது பலவீனத்தை ஒப்பு கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். குற்றஞ்சொல்வதற்கு அடுத்தவரை சுட்டிக் காட்டக்கூடாது.


4. அவர் புகழுக்கு மயங்காமல் கண்ணியமாக இருக்க வேண்டும்.


5. அவர் தனது ஆதரவாளர்களைக் கையாள தெரிந்திருக்க வேண்டும். மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து மதிப்பளிக்க வெண்டும்.


6. மற்றவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும். முன் மாதிரித் தலைவராக இருக்க வேண்டும்.


7. அவரது தலைமையின் கீழ் செயல்படுபவர்களுடன் ஒப்பிடுகையில் அவர் ஆற்றல்மிக்கவராகத் தலைவராக இருக்க வேண்டும்.


ஒரு சில முன்னணி நாடுகள் முன்னேற்றத்திற்கு ஒரு தலைவரின் சிறந்த ஆட்சி முறைதான் காரணம். ஒரு நாட்டுக்கு நல்ல தலைவர் இல்லை என்றால் சிறந்த ஆட்சி இருக்காது. நிறைந்த ஆட்சி இல்லை என்றால் மக்கள் அந்த ஆட்சியை விரும்பமாட்டார்கள் என்று துன் டாக்டர் மகாதீர் முகமட் கருத்துரைத்துள்ளார்.


-நன்றி 'பெர்னாமா'
பி.குறிப்பு:டும்...டும்...டும்..... மலேசியாவில் மிக விரைவில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது!

1 comments:

')) said...

மலேசியாவில் அடுத்து ஒரு சில வாரங்களில் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என்ற ஆருடம் வலுக்கிறது. தேர்தல் காய்ச்சல் ஆளும் கட்சி மற்றும் எதிர் கட்சிகளின் போக்கில் தெரிகிறது.