Monday, January 14, 2008

சிவகங்கை சுத்தானந்த பாரதி

அச்சமற்ற உண்மை - கிளியே
ஆண்மையுள்ள நெஞ்சம்.
கொச்சையற்ற பேச்சு - நல்ல
கொள்கை கொண்ட நட்பு.
இன்னலற்ற சாந்தம் - யார்க்கும்
இனிது செய்யும் பொறுமை
தன்னலத் தவிர்ப்பு - கிளியே
தருமமாகும் இவையே!

குறிப்பு: பாட்டுக்கொரு புலவன் எட்டயபுரம் சுப்பிரமணிய பாரதி மட்டுமில்லை; சிவகங்கைசுத்தானந்த பாரதியும்தான். பாரதி பாடல்கள் போலவே படித்த மாத்திரத்தில் பாடம் ஆகிவிடுபவை அவருடைய பாடல்கள்.

0 comments: