Saturday, March 1, 2008

பிரபஞ்சப் பாதையிலே....ஆழ்மனத் தொடர்பு




நம்மில் பெரும்பாலோர், மேற்கத்திய பானியின் தாக்கத்தால் இன்று இந்நவீன உலகில் சிக்குண்டு இருக்கின்றோம். தெரிந்தோ தெரியாமலோ ஒருவகை
மனப்பாதிப்புக்கும், சில சமயம் உளைச்சலுக்கும் ஆளாகிறோம். சில சமயம் என்ன இது செக்கு மாட்டு வாழ்க்கை ? என்று நொந்துகொள்கிறோம். ஏன் ?


நமக்குப் பல கடமைகள். நம் பணி, நம் குடும்பம், நம் நண்பர்கள் வட்டம், நம் சமூகக்கடப்பாடு மற்றும் அரசியல் என்று தொடர்பு ஏற்படுத்தி
விரிவுபடுத்திக் கொண்டு இருக்கிறோம். சாதாரண பொழுது போக்குக் காரியங்களில் கூட நம் செயல்பாடும் சக்தியும் மிகுதியாகத் தேவைபடுகிறது.


ஏன் இந்நிலை ? ஏனெனில், நாம் அளவுக்கு அதிகமாக வெளிநோக்கிய விசயங்களில் மூழ்கியுள்ளோம். வெளிநோக்கிய பயணக் களைப்பை ஈடுசெய்ய உள்நோக்கியப் பயணம் (inner journey) தேவைப்படுகிறது.
உடனடி நிவாரணம் ஒன்று இருக்கிறது. நம் ஆதாரத்துடம் தொடர்பு கொண்டு உயர் உணர்வுகளின் சக்திகளைப் பெறுவதைத் தவிர வேறொன்றுமில்லை!
நம் ஒவ்வொருவரின் மனமும் மகத்தான சக்தி படைத்தது என்பதை மனோவியல் அறிஞர்கள் மற்றுமன்றி ஆன்மீக குருமார்களும் நிரூபித்து
வருகிறார்கள்.


வாழ்க்கைப் பாதையில் எல்லாமே மகிழ்ச்சி நிறைந்தவையாக இருப்பதில்லை! சில இடர்பாடுகளும் சோதனைகளும் இருக்கத்தான் செய்கிறது. பார்க்கின்ற கோணதில் அந்தந்த சமயத்தில் நம் மனநிலை எப்படி இருக்கிறதோ அவ்வாறே பிரதிபலிக்கின்றோம்.

சில சம்யங்களில் அளவுக்கு அதிகமாக வெளி விசயங்களில் சுழன்றுக் கொண்டிருப்பதால் ஆழ்மனத் தொடர்பு தடைபடுகிறது. தற்காலிகமாக பிரபஞ்சப் பேருணர்வின் தொடர்பிலிருந்து விடுபட்டுள்ளோம். ஆழ்மனதிற்கும்( subconscious mind ) பிரபஞ்ச மனதிற்கும் ( cosmic conscious mind ) உள்ள தொடர்பு, அது சம்பந்தமான அறிவு எல்லாம் நம் பள்ளிகளில் இன்னும் போதிக்கப்படவில்லை. வருங்காலங்களில் அவை முக்கியத்துவம் பெறலாம்! நமக்கு சிறிது காலம் தேவைப்படுகிறது.

ஆழ்மனதுடன் தொடர்பு கொள்வதற்கும் நமக்குப் பொறுமையும் நிதானமும் தேவைப்படுகிறது. உள் மன உயர் உணர்வுடன் கலக்க சிறிது காலம் நம்மையே சுய சோதனைக்கு ஆளாக்க வேண்டியுள்ளது.நமக்கும் புற சூழ்நிலையில் ஏற்படுகின்ற மாற்றஙகளையும் கூர்ந்து கவனிக்க விழிப்புணர்வும் அவசியம்.


ஆழ்மனதையும் பிரபஞ்ச அறிவையும் திறக்கும் நல்ல திறவுகொல் - தியானம் மட்டுமே! பிரார்த்தனை, தியானம், யோகம் இவையெல்லாம் பத்திரமான திறவுகோல்கள். இவற்றுடன் மனதைப்பற்றியும்,எண்ணங்களைப் பற்றியும் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு மிகுந்த பயிற்சியும்,பொறுமையும்,
ஆதரவும் தேவைப்படுகிறது.


உண்மையிலேயே இது இயற்கையான ஒன்று. நம் சமூகத்தினர் "அர்ப்பணிப்பு"எனும் வார்த்தைக்கு செயல் வடிவம் கொடுத்தவகள். முயற்சிக்கு, வெற்றி - தோல்வி என்ற இரண்டு முடிவுகள் உண்டு. "அர்ப்பணிப்புக்கு" வெற்றி என்ற ஒரு முடிவுதான் இருக்க முடியும். அத்தகைய மனநிலை வாய்க்க, அல்லது பழக்கப்படுத்திக்கொள்ள விழைவது நன்மை பயக்கும். ஆழ்மனத் தொடர்பும், பிரபஞ்சத் தொடர்பும் கிட்ட வேண்டும் என்ற மனதைக் கடந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் காரியங்கள் ஆற்றும் போது,இயற்கை அந்தப் பிரபஞ்ச பேராற்றல் நமக்குப் பலனை வாரி வழங்கும்! அதன் பிறகு, அப்பேராற்றலோடு தொடர்ந்து பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் எனும் அவா கூடுவதை மெய்யாக உணரலாம். உங்களைச் சுற்றியிருக்கும் எல்லாமே பேசும்.

'நாம்தான் இந்தப் பிரபஞ்சம்; இப்பிரபஞ்சம்தான் நாம்' - அண்டத்திலுள்ளதே பிண்டம்; பிண்டத்திலுள்ளதே அண்டம்! என்பதைப் போல உயர் சிந்தனை-
உயர் எண்ன அலைகள் நம்மைச் சுழ்ந்திருக்கும்.

3 comments:

')) said...

neenggal solvathu mutrilum unmaiye.Indraya avasara ulagil ithellaam saraasari makkalukku sendradaivathil pirachanai elugirathu.
Nam samuthaayam muthalil, aangilo mogathai 'sirithu kuraithu' nam hindu/inthiya palaiya muraigal kadai pidithal vendhum.
Palam perum pokishanggal palavatrai naam maranthu, allathu unaraatha nilaiyil vaalthu kondhu irukirom.
Yaga aasana payirchi athile mukkiyamaana ondru endru koralaam.

thanggalai pondra 'bloggar' galin sevai miga-miga avasiyamaagamum, avasaramaagavum thevai padugirathu.
thodarnthu eluthunggal. nandri.

')) said...

அன்பு கோவிந் அவர்களுக்கு,

தங்கள் மறுமொழிக்கு நன்றி.
பயனான விசயங்கள் பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி.

')) said...

chennail,madurail ,coimbutoreil enge karpathu thiyanam