Sunday, March 2, 2008

நல்லாசிரியருக்குரிய குணநலன்கள்!

நல்லாசிரியர் என்று யாரைக் குறிக்கிறோம்? சமூகத்தில் இயல்பாகவே ஆசிரியர்களுக்கு தனி மதிப்பு உண்டு. ஆசிரியர் நல்லாசிரியர் ஆகும் போது சிறப்புமதிப்பு வழங்கப்படுகிறது. முதலில் வழங்குபவர்கள் மாணாக்கர்களே மாணவர்களின் வழிபெற்றோர்களுக்கும் தெரிய வரும்போது நல்லாசிரியர்களின் நன்மதிப்பு சமூக அங்கீகாரம்பெற்று விடுகின்றது.

சரி, நல்லாசிரியருக்குறிய குணநலன்கள் எப்படி இருக்க வேண்டும் ?

முதலில், அவர் மாணவர் நலனுக்காகப் பாடுபடுபவராயிருத்தல் வேண்டும். வகுப்பறையின்உள்ளேயும் வெளியேயும் மாணவர்களுக்கு எவை நன்மை பயக்கும் விசயங்கள் என்று தீர்மாணித்து அதற்காகப் போராடுபவரே நல்லாசிரியர் தகுதிக்கு உரியவவர் ஆவார். ஆசிரியரின் எந்த முடிவும் மாணவர்களிடன் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதனை விழிப்புணர்ந்துமிகச் சரியான, மாணவர்களின் உயர்வுக்குச் சாதகமான முடிவுகள் எடுக்கும் தீர்க்கச் சிந்தனை படைத்தவராயிருத்தல் வேண்டும். நல்லாசிரியர் இயல்பாகவே தன்னலமற்றவராவார். அவர்எப்போதுமே மாணவர்களுக்குத் தான் முன்னுரிமை வழங்குவார்.

இரண்டாவது, நல்லாசிரியர் என்பவர் மற்றவரை மதிக்கும் நற்பண்பு உடையவர். அவர்கள்தங்கள் வகுப்பு மாணவர்களை மதிக்கிறார்கள்;
வகுப்பறையில் மாணவர்களின் செயலூக்கங்களையும் நிர்வாகத்தையும் மதிக்கிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் பெற்றோர்களையும், சமூக அங்கத்தினரையும்மதிக்கிறார்கள். கற்றல் கற்பித்தல் நடவடிக்கைக்கு உரிய தரத்தை சுயமதிப்பிட்டு தங்கள் துறையில் நிபுணத்துவம் பெறுகிறார்கள்.
மூன்றாவது யாதெனில், நல்லாசிரியர் தொடர்ந்து கற்கிறார். பொதுவாக தம்மைச் சுற்றி நடைபெறும்அனைத்துத் துறைகளிலும் ஓரளவு விசயஞானம் பெற்றவராயிருக்கிறார். அவர் தொடர்ந்து தம் துறையைச்சார்ந்த நூலகளை வாசித்து காலத்துக்கேற்பத் தயார்நிலையில் இருக்கிறார். அறிவுசார்ந்த விசயங்களில் ஆழ்ந்த ஈடுபாடு காட்டுகிறார்.

நான்காவது, நல்லாசிரியர் ஒரு நல்ல உரையாளராகவும் திகழ்கிறார். ஒரு கருத்தை சபையறிந்து நன்கு விளக்கும்ஆற்றல் மிக்கவராவார். அதே சமயத்தில், அவர் மற்றவர்களின் கருத்துக்களையும் நன்கு கேட்கிறார். மாணவராகட்டும் பெற்றோராகட்டும் அவர்கள் சொல்வதை நன்கு உள்வாங்கிக் கொள்கிறார். பிறகு சமயோசித உத்தியில் பிரச்னைகளுக்குவழி காண்கிறார்.

இறுதியாக, கற்றல் தொடர்ந்து நிகழ மாணவர்களே பொறுப்பேற்க வேண்டும் எந்தனை வலியுறுத்துகிறார்.நல்லாசிரியர், மாணவர்களின் 'கற்றல் நோக்கங்கள் ' அடைவதற்கு அவர்களுடன் இணைந்தே செயல் திட்டங்கள்வகுக்கிறார். அவற்றை விவேகமான முறையில் செயல்படுத்தி 'கற்றல் இலக்கு ' அடைவதற்கு மாணவர்களுக்கு எப்போதும் உதவுகிறார்.
பி.கு : தமிழ்ப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் நல்லாசிரியர்களா..? ஒவ்வொரு ஆசிரியரும் சுயமதிப்பீடு செய்ய வேண்டும்!

2 comments:

')) said...

இங்கெல்லாம் இந்த அங்கீகாரமும் அரசியலாகி விட்டது.ஆனால் மாணாக்கர்களின் அங்கீகாரம் எல்லாவற்றினும் மேலானது.

')) said...

ஆம். கற்பிக்கப்படும் மாணாக்கர்களே ஆசிரியரின் முதல் அல்லது நேரடி மதிப்பீட்டாளர்.