தேதி :16.05.2013 (வியாழன்), நேரம்: இரவு 8.00க்கு, இடம் : ஜோகூர் தமிழர் சங்க பணிமனை.
கடந்த ஆசிரியர் தினத்தன்று, ஜோகூர் மாநில அளவிலான "தகவல் அறிதிறன் விழிப்புணர்வு இயக்கம் " தொடக்கம் கண்டது.
உத்தமம் தலைவர் திரு. சி.ம.இளந்தமிழ் அவர்களின் வருகை, ஜோகூர் மாநில ஒருங்கிணைப்புக் குழு அமைப்பு , தெமெங்கோங் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி விரிவுரைஞரும் தமிழ்த் துறை தலைவருமாகிய திருமிகு இரா.சேதுபதி அவர்களின் சிறப்பு 'இணையத்தில் தமிழும் கற்றல் சூழலும்' எனும் சொற்பொழிவு அனைவரையும் கவர்ந்தது.
மாநில ஒருங்கிணைப்புக் குழு தலைவராக திரு.இல.வாசுதேவன், உத்தமம் தலைவரால் அறிமுகப்படுத்தப்பட்டார்.
12வது உலகத் தமிழ் இணைய மாநாடு 2013 - மலாயா பல்கலைக்கழகமும் உத்தமமும் இணைந்து ஏற்பாடு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment