Tuesday, April 19, 2011

அந்தக்கரணங்கள்



ஆறாவது அறிவாகிய மனம், ஒரு மாயைத்திரை. அது கண்ணுக்குத் தெரியாத ஓர் எந்திரம். மனத்தை வென்று வெட்டவெளிக்குச் செல்லும் மகான்கள் மனத்தை மிக நுட்பமாக ஆராய்ந்தவர்கள் ஆவர். மனதிற்குள் ஐந்து அங்கங்கள் இருப்பதாக உணர்த்திச் சென்றுள்ளனர். மனத்தின் இந்த அங்கங்களை அந்தக்கரணங்கள் என்று எடுத்துரைத்தனர்.

சைவச் சித்தாந்தம் வகுத்த மகான்கள் மனதை நான்கு உறுப்புகளாகப் பெயரிட்டனர்: அவை மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்பனவாம். திருஅருட்பிரகாச வள்ளலார்தான் ஐந்தாவது உறுப்பாகிய 'உள்ளம்' என்ற ஒன்று இருப்பதை உறுதி செய்தார். இவை ஐந்தும் அகக்கருவிகள் எனத் தெளிவுபடுத்தினார்.

1 comments:

Anonymous said...

தங்களின் விளக்கத்திற்கு மிக்க நன்றி ஐயா.....சுபாஷினி ஜெய்சீலன்