Wednesday, July 15, 2009

சுவாமி சத்யானந்தா அவர்களின் நூற்றாண்டு விழா

[Image Source: Courtesy of http://thestar.com.my/health/story.asp?file=/2009/7/12/health/4297967&sec=health ]

மலாயாவில் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னர் பல மகான்கள் நாட்டிற்காகவும், இனம், மொழி, சமயம் மற்றும் பண்பாடிற்காகவும் சேவையாற்றியவர்கள் பலர் வாழ்ந்துள்ளனர். அவர்களைப் பற்றி இன்றைய இளையோர் அறியாமல் இருக்கின்றனர். புனித சேவையாற்றியர்களை மறக்கக்கூடாது.

அவர்களில் உயர்ந்த ஜீவனாக மலாயா மக்களிடையே 1940 களில் சேவையால் பிரபலமடைந்த, சுவாமி சத்யானந்தா என்பவர் ஆவார். இந்த மகான்தான் 1950இல் சுத்த சமாஜம் (Pure Life Society)எனும் சேவையமைப்பையும் பின்னர் 1956இல் அனைத்துச் சமய புரிந்துணர்வு மன்றத்தையும் ( Malayan chapter of World Council for Interfaith Cooperation,WCIC ) தோற்றுவித்தார்.

இன்று மலேசிய சுத்த சமாஜம் சுவாமி சத்யானந்தாவின் நூற்றாண்டு விழாவை கொண்டாடுகிறது.

சுவாமி சத்யானந்தா ஜூலை 15, 1909இல் இலங்கையில் பிறந்தார். சிறுவனாகத் தம் பெற்றோருடன் ஈப்போவில் குடிபெயர்ந்தார். அவர் தந்தை அங்கு விவசாயத்தில் ஈடுபட்டார். அவரது 10வது வயதில் அவரின் தந்தை காலமானார்;ஓராண்டிற்குப் பிறகு அவர் தாயையும் இழந்தார். உறவினர் ஒருவரின் ஆதரவில் சேய்ன்ட் மைக்கல் எனும் கிருஸ்துவப் பள்ளியில் கல்வியை ஆரம்பித்தார். வீட்டில் இந்து சமயத்தையும் புத்த சமயத்தையும் பயின்று வாழ்ந்த வேளையில், வெளியே இஸ்லாம் சமயத்தைப் பற்றியும் தெரிந்து கொண்டார். எனவே, இளமையிலேயே ஆன்மீக நாட்டமும் ஈடுபாடும் வெளிப்பட்டது.

தம்முடைய இளமைக் காலத்தில் உலகத்தில் உயர்ந்த மகான்கள், அறிஞர்கள், துறவிகள், அடியார்கள் பற்றிய பல விசயங்களைக் கற்று வந்தார். ஆன்மீக நாட்டம் இவரை பிற்காலத்தில் பிரமச்சாரியாக, சுவாமியாக செப்பனிட வழிவகுத்தது.

இளவயதிலேயே சிங்கப்பூருக்குச் சென்று விவேகானந்தர் பள்ளியிலும், இராமகிருஷ்ண பணிமனையிலும் சேவையாற்றினார். பிற்காலத்தில், மகான் இராமகிருஷ்ணரின் சீடரான சுவாமி விஜ்னானந்தா அவர்களின் சீடரானார்.

அடிப்படை ஆன்மீக விசயங்களைத் தெரிந்து வைத்திருந்தாலும், முறையாக சமயக் கல்வியையும், தத்துவம், சமஸ்கிருதம், தமிழ் மொழியென பல்வேறு கல்வி நிலையங்களில் பாடம் பயின்றார். இவர் தத்துவத்துறையில் முனைவர் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1940 இல் சிங்கப்பூர் திரும்பிய சுவாமி சத்யானந்தா அவர்கள், அங்கு விவேகானந்தா ‍ஆண்கள் பள்ளி மற்றும் சரமணி பெண்கள் பள்ளியிலும் முதல்வராகச் சேவையாற்றினார்.அக்காலக் காட்டத்தில், சமூக விழிப்புணர்வு, மொழி, கலை மற்றும் பண்பாடு தொடர்பான கட்டுரைகளைத் தமிழ், ஆங்கில நாளிதழ்களில் எழுதி வந்தார்.அவர் எழுதிய " Glimpses of Malayan History and Influences of Indian Culture on Malaya " எனும் நூல் Malayan Civil Service Examination - MCSE " தேர்வுக்கான பாட நூலாக அங்கீகரிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. சமயம் மற்றும் அனைத்து சமய நல்லினக்கம் பற்றி பல்வேறு சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார்.

1940களில் "சுத்த சமாஜம்" வழி அனாதைக் குழந்தைகளுக்கான ஆசிரமத்தை நிறுவியதுடன் மலாயாவின் அரசியல் சமூக வரலாறுகள் பற்றியும் இந்து சமயம் பற்றியும் நூல்கள் எழுதினார். பிரமச்சாரி கைலாசம் என்பது அவருடைய மற்றொரு பெயராகத் திகழ்ந்தது. அவருடைய நூல்களில் குறிப்பிடத்தக்கன: 1940இல் "மலாயா சரித்திரம்"; 1941 இல் "மலாயா தேசிய சரித்திரக் காட்சிகள்"; 1950 இல் "கண்ணன் சரித்திரம்"; 1952 இல் " நமது சமய விளக்கம்" மற்றும் 1953 இல் "உயர்ந்தோர் உலகு" போன்றவையாகும்.

ஏழைகளுக்கும் அனாடைக் குழந்தைகளுக்கும் தமது சேவையை சிங்கப்பூரிலும் மலாயாவிலும் தொடர்ந்தார். அவரது சீடராக அம்மா 'மங்களம்' இன்றுவரை மலேசியாவில் சுத்த சமாஜத்தை நிர்வகிக்கிறார்.

சுவாமி அரவிந்தரின் சீடரான யோகி சுத்தானந்த பாரதியின் வழிகாட்டுதலின் பேரிலும் கேட்டுக்கொண்டதற்காகவும் சுவாமி சத்யானந்தா அவர்கள் "Pure Life Soceity" மலாயாவில் தோற்றுவித்தார்.

அவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் 1948இல் "Pure Life Soceity " சுத்த சமாஜம் தோற்றுவிக்கப்பட்டு பின்னர் த‌ம்முடைய 41வது பிறந்த நாளின் போது, ஜூலை 15, 1950 இல் முறையாக பதிவுசெய்யப்பட்டது. கடந்த 60 ஆண்டுகளில் பல ஆனாதக் குழந்தைகள் சுவாமி சத்யானந்தாவின் ஆதரவிலும் மங்கலம் அம்மா அவர்களின் அன்பிலும் வளர்ந்திருக்கிறார்கள். தூய அன்பின் ஊற்றாக 'சுத்த சமாஜம்' திகழ்ந்து வந்துள்ளது. சுவாமி சத்யானந்தாவின் நூற்றாண்டு விழா இன்று முதல் ( 15 - 18th JULY, 2009 ) வரை பல்வேறு கண்காட்சி, மாநாடு, சொற்பொழிவு என நடைபெறுகின்றது.


‍நன்றி:The Star கட்டுரை மூலத்திலிருந்து ஒரு பகுதி எடுத்தாளப்பட்டுள்ளது.

மேல்விவரங்கள் பெற தொடர்பு கொள்க: 03-77829391, 03-77851087, 03-77828303 மின்னஞ்சல் முகவரி info@purelife.org.my

“The more the ego is eliminated, the nearer man goes to the source of his life.” – Swami Satyananda.





4 comments:

')) said...

வணக்கம், மிகவும் பயனுள்ள தகவலை பகிர்ந்திருக்கிறீர்கள், அம்மா "மங்களம்" அவர்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள ஆவல் ஆனால் இன்னும் நிறைவேறவில்லை.

')) said...

கனிந்த வணக்கம். நமக்குப் பிடித்த, பிரியமான அறிஞர் பெருமக்களை மகான்களைக் காணவோ, தெரிந்து கொள்ளவோ தீவிர சிந்தனையும் ஆர்வமும் போதும்! நிச்சயம் செய்திகள் வரும், எங்கிருந்தாகிலும் !
எப்படியா ? இப்படி !

http://www.smkassunta.edu.my/news_NST111207.htm

http://blog.scimalaysia.org/post/2008/01/SCI-and-Mother-Mangalam.aspx

http://www.assuntaalumni.com/media/071211-2.html

')) said...

தங்களின் கட்டுரை சிறப்பு. வாழ்க தங்களின் சேவை!

')) said...

சுவாமி சத்யானந்தா அவர்களைப் பற்றித் தெரிந்து கொண்டேன்.

மிக்க நன்றி.

தொடர்க உங்கள் படைப்புகள்.