
இந்திய நாட்டில் கங்கை நதியானது பல கோணங்களில் பிரசித்திப்பெற்றது.ஆன்மீக யாத்திரீகளுக்கு கங்கை அன்னையாகக் காட்சியளிக்கிறாள். அப்பன் ஆதிசிவன் இப்புவியில் முதன் முதலில் குடிகொண்ட தளம் இமயமலையாகும்.
இமயமலையில் 14 அடி உயரத்தில் 'சூகோமுக்' என்ற குகையிலிருந்து கங்கை நதி உற்பத்தியாகிறது. அங்கு கங்கா தேவியின் கோயில் ஒன்று உள்ளது. இந்த கோயிலுக்கு ஒரு மகத்துவம் உள்ளது. நவம்பர் மாதம் முதல் மே மாதம் வரை 'பனி' மூட்டம் காரணமாக இக்கோயிலை தரிசிக்க இயலாது. ஆனால் கோயிலை மூடும்போது உள்ளே ஒரே ஒரு தீபம் மட்டும் ஏற்றி விடுவார்கள். இந்த தீபம் கடுங்குளிர் பனியிலும் அனையாமல் கோடை காலத்தில் கோயிலை திறக்கும் போதுகூட எரிந்து கொண்டிருக்குமாம்.ஆச்சரியம் தானே!