
மலேசியா என்று வழங்கப்படுவதற்கு முன்பு மலாயா என்றுதான் அழைத்தனர். கொஞ்சம், சரித்திரம் காண்போமா ? மலாயாவை ஆட்சி செய்தவர்களுக்கு பல காரணங்கள் இருப்பினும், முதன்மைக் காரணமாக இருப்பது அதன் இயற்கை வளம் என்றால் மிகையாகாது. மேலும் அதனால் கிடைக்கப்பெறும் வாணிப லாபம் என்றும் கூறலாம்.
ஏற்கனவே கூறியது போல், மலேசியா ( மலாயா ) இயற்கை வளம் மிகுந்தது. வரலாற்றுப் புகழ் பெற்றது. இங்கு வாசனைப் பொருட்கள் மிகுதியாகக்
கிடைத்தன. கிராம்பு, மிளகு, ஏலம்,பட்டை முதலியன வாசனைப் பொருட்களாகும். தங்கம், ஈயம் போன்ற உலோகப் பொருட்களும் கிடைத்தன.
இப்பொருட்களை வாங்குவதற்காக வந்த மேல் நாட்டவர் பலர் மலாயாவிற்கு வந்தனர். இங்குள்ள இயற்கை வளம் அவர்களைக் கவர்ந்ததால் அதைக்
தங்களின் உரிமையாக்கிக் கொள்ளவே மலாயாவை அவர்கள் கைப்பற்றினர்.
கிடைத்தன. கிராம்பு, மிளகு, ஏலம்,பட்டை முதலியன வாசனைப் பொருட்களாகும். தங்கம், ஈயம் போன்ற உலோகப் பொருட்களும் கிடைத்தன.
இப்பொருட்களை வாங்குவதற்காக வந்த மேல் நாட்டவர் பலர் மலாயாவிற்கு வந்தனர். இங்குள்ள இயற்கை வளம் அவர்களைக் கவர்ந்ததால் அதைக்
தங்களின் உரிமையாக்கிக் கொள்ளவே மலாயாவை அவர்கள் கைப்பற்றினர்.
மலாயாவிற்கு முதலில் வந்த ஐரோப்பியர்கள் போர்த்துகீசியர்கள் ஆவர். அவர்கள் 1511இல் மலாக்காவைக் கைப்பற்றினர். 130 ஆண்டுகள் வரையிலான அவர்களுடைய ஆட்சிகளுக்குப் பிறகு மலாக்கா டச்சுக்காரர்களின் வசமாயிற்று.19ஆம் நூற்றாண்டு முதல்ஆங்கிலேயர்கள் மலாயாவைச் சிறுகச் சிறுகத் தங்கள் வசமாக்கினர்.
அந்நிய ஆட்சியாளர்கள் மக்களின் நலனில் அக்கறை கொள்ளவில்லை. தம் சொந்த இலாபத்தையே குறிக்கோளாகக் கொண்டிருந்த அவர்கள் நாட்டின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடவில்லை. இத்தகைய ஆட்சியை வெறுத்த மக்கள் சுதந்திரமாக வாழ விரும்பி அதற்காகப் போராடவும் செய்தனர். இப்போராட்டத்தின் விளைவாக 1957இல் ஆகஸ்ட் திங்கள் 31ஆம் நாள் மலாயா சுதந்திரம் பெற்றது.



